கோவையில் தேவாலயத்தில் புகுந்து தகராறு: 8 பேர் மீது வழக்கு

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி நடந்த  அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்


கோவை: கோவை தேவாலயத்தில் புகுந்து தகராறு செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி அறுவடை விழா நடந்தது

அப்போது, சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் நிர்வாகிகள் என்று கூறி சிலர், அங்கு நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறில் ஈடுபட்டு, பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயன்றனர்.

அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.10 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றனர். இதுகுறித்து, கிறிஸ்தவ மத போதகர் பிரபு டேனியல், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

ரேஸ்கோர்ஸ் போலீசார், டேவிட் சாலமன், 50, ராபின்சன் சாலமன், 45, பரணபாஸ் வசந்தகுமார், 49, பிரபாகரன், 48, நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48, ஜோஸ்வா, 47 ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Newsletter

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...