கோவையில் தேவாலயத்தில் புகுந்து தகராறு: 8 பேர் மீது வழக்கு

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி நடந்த  அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்


கோவை: கோவை தேவாலயத்தில் புகுந்து தகராறு செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி அறுவடை விழா நடந்தது

அப்போது, சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் நிர்வாகிகள் என்று கூறி சிலர், அங்கு நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறில் ஈடுபட்டு, பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயன்றனர்.

அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.10 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றனர். இதுகுறித்து, கிறிஸ்தவ மத போதகர் பிரபு டேனியல், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

ரேஸ்கோர்ஸ் போலீசார், டேவிட் சாலமன், 50, ராபின்சன் சாலமன், 45, பரணபாஸ் வசந்தகுமார், 49, பிரபாகரன், 48, நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48, ஜோஸ்வா, 47 ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Newsletter

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...