கோவையில் தேவாலயத்தில் புகுந்து தகராறு: 8 பேர் மீது வழக்கு

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி நடந்த  அறுவடை விழாவின் போது தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்


கோவை: கோவை தேவாலயத்தில் புகுந்து தகராறு செய்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், கடந்த மாதம் 10ம் தேதி அறுவடை விழா நடந்தது

அப்போது, சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் நிர்வாகிகள் என்று கூறி சிலர், அங்கு நுழைந்து அறுவடை விழாவை நடத்தக்கூடாது என தகராறில் ஈடுபட்டு, பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயன்றனர்.

அறுவடை விழாவிற்காக பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.10 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றனர். இதுகுறித்து, கிறிஸ்தவ மத போதகர் பிரபு டேனியல், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

ரேஸ்கோர்ஸ் போலீசார், டேவிட் சாலமன், 50, ராபின்சன் சாலமன், 45, பரணபாஸ் வசந்தகுமார், 49, பிரபாகரன், 48, நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48நித்தா, 43, கிரேஸ், 45, ராஜ் சுகுமார், 48, ஜோஸ்வா, 47 ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...