ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு

தமிழகத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் வரும் எனவும் அப்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் எனவும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீர் நிலைகளை சீரமைக்க வலியுறுத்தும் விதமாக பாரதீய நனதா கட்சியின் சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை எனும் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

அந்நிகழ்ச்சின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் இன்று கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் அதிமுக-வுக்கு மாற்று பாஜகவே என்றார்.

அதிமுக தற்போது மூன்றாக உடைந்திருப்பதாகவும் விரைவில் அக்கட்சி சிதறும் எனவும் கூறிய அவர், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததால் சசிகலா சிறை சென்றிருப்பதாகவும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் பட்சத்தில் திமுக-வின் நிலை என்ன என்பதும் அப்போது அதிமுக-வுக்கு மாற்று யார் என்பதும் தெரியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் தங்கள் ஆட்சியின் ஊழலை மறைப்பதற்காகவே திமுக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக மீனவர்களிடம் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேபோல் தமிழகத்தில் வாட் வரி என்ற பெயரில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி பேருந்து கட்டணம் மறைமுகமாக 20 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எல்லா விதத்திலும் மக்கள் மீது சுமை ஏற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தற்போது தமிழகத்தில் சீரான மின்சாரம் கிடைப்பதற்கு மத்திய அரசின் உதை மின் திட்டமே காரணம் என மேற்கோள் காட்டிய தமிழிசை சௌந்திரராஜன் ஒரு இடம் கூட இல்லாத மணிப்பூரிலேயே பாஜக ஆட்சி அமைக்கிறது என்றால் தமிழகத்திலும் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், எப்போது வேண்டுனாலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம், அப்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...