ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு

தமிழகத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் வரும் எனவும் அப்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் எனவும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீர் நிலைகளை சீரமைக்க வலியுறுத்தும் விதமாக பாரதீய நனதா கட்சியின் சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை எனும் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

அந்நிகழ்ச்சின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் இன்று கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் அதிமுக-வுக்கு மாற்று பாஜகவே என்றார்.

அதிமுக தற்போது மூன்றாக உடைந்திருப்பதாகவும் விரைவில் அக்கட்சி சிதறும் எனவும் கூறிய அவர், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததால் சசிகலா சிறை சென்றிருப்பதாகவும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் பட்சத்தில் திமுக-வின் நிலை என்ன என்பதும் அப்போது அதிமுக-வுக்கு மாற்று யார் என்பதும் தெரியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் தங்கள் ஆட்சியின் ஊழலை மறைப்பதற்காகவே திமுக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக மீனவர்களிடம் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேபோல் தமிழகத்தில் வாட் வரி என்ற பெயரில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி பேருந்து கட்டணம் மறைமுகமாக 20 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எல்லா விதத்திலும் மக்கள் மீது சுமை ஏற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தற்போது தமிழகத்தில் சீரான மின்சாரம் கிடைப்பதற்கு மத்திய அரசின் உதை மின் திட்டமே காரணம் என மேற்கோள் காட்டிய தமிழிசை சௌந்திரராஜன் ஒரு இடம் கூட இல்லாத மணிப்பூரிலேயே பாஜக ஆட்சி அமைக்கிறது என்றால் தமிழகத்திலும் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், எப்போது வேண்டுனாலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம், அப்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...