அனுவாவி சுப்ரமணியசாமி கோவிலில் ரூ.13 கோடி மதிப்பில் ரோப்கார் சேவை - அமைச்சர் சேகர்பாபு உறுதி!

கோவை பெரியதடாகம் பகுதியில் உள்ள அனுவாவி கோவிலில் ரோப்கார் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 460 மீட்டருக்கு ரோப்கார் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.


கோவை: பெரியதடாகத்தில் உள்ள அனுவாவி கோவிலில் 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ரோப்கார் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவை பெரியதடாகம் பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மட்டுமே செல்ல முடியும். இதர கோவில்களில் இருப்பது போல் இங்கு சாலைகளோ வேறு வசதிகளோ இல்லை.

எனவே அடிவாரத்தில் இருந்து மேலே உள்ள கோவிலுக்கு செல்ல சாலை வசதிகளோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என பல்வேறு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு ரோப்கார் அமைப்பது குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மலை கோவில்களில் முதியோர்கள், வசதிக்காக ரோப்கார், தானியங்கி லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென முதல்வரின் உத்தரவிற்கிணங்க அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 560 படிகள் கொண்ட இக்கோவிலில் 460 மீட்டர் அளவுள்ள ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த வசதி 13 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ரோப் கார் அமைக்கப்படுகின்ற பொழுது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி அனைத்தும் இணைந்து ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கும் ரோப் கார் வசதியை ஏற்படுத்தி தருவதற்கும், மேலும் ஏற்கனவே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கரூர் அய்யர்மலை திருக்கோவில், சோளிங்கர் நரசிம்ம பெருமாள் திருக்கோவில்களில் ரோப்கார் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

அதேபோல் மருதமலையில் தானியங்கி லிப்ட், சுவாமி மலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கு உண்டான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு மருதமலையில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சுவாமி மலையிலும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை வரப்பெற்று அங்கு 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் தானியங்கி லிஃப்ட் அமையப்பட உள்ளது.

இந்த ஆட்சி அமைந்த பிறகு சுமார் 922 கோவில்களில் குடமுழக்கு நடைபெற்று உள்ளது. 5135 கோடி ரூபாய் பெருமானமுள்ள 5335 ஏக்கர் நிலம் இந்த ஆட்சியில் தான் மீட்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியை பொருத்தவரை இறை அன்பர்களுக்கும், இறைப்பற்று கொண்டவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக அமைந்துள்ளது.

அனுவாவி கோவில் நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் சென்சார், அல்லது மின்வேலிகள் அமைக்கப்படுமா என்பது குறித்தான கேள்விக்கு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவசியம் தேவைப்படும் என்றால் அதனையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மற்றும் அனுவாவி கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...