சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் - ஈஷா கிராமோத்சவம் குறித்து வீடியோ மூலம்‌ சத்குரு அறிவுரை!

நம்‌ வாழ்க்கையில்‌ சுறுசுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும் என கிராமாத்சவம் விளையாட்டு வீரர்களுக்கு சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் என ஈஷா கிராமோத்சவம் குறித்த வீடியோவில்‌ சத்குரு அறிவுறுத்தியுள்ளார்.



இந்தியாவின்‌ மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15வது ஈஷா கிராமோத்சவம்‌ இன்று தொடங்குகிறது.



இது தொடர்பாக சத்குரு அவர்கள்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌, நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ வாழ்க்கையையே ஒரு விழாவை போல்‌ கொண்டாட்டமாக வைத்து இருந்தோம்‌.

நம்‌ தேசத்தில்‌ 365 நாட்களும்‌ ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும்‌. விழா என்றால்‌ வேலை செய்ய கூடாது. விடுமுறை எடுக்க வேண்டும்‌, அதிகமாக சாப்பிட வேண்டும்‌ என்பது அல்ல. எப்போது நீங்கள்‌ எல்லா செயல்களையும்‌ கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்‌.

நம்‌ கிராமங்களில்‌ உழவு செய்யும்‌ போது, நெசவு நெய்யும்‌ போது, சமையல்‌ செய்யும்‌ போது, குழந்தையுடன்‌ விளையாடும்‌ போது என எந்த செயல்‌ செய்தாலும்‌ அதில்‌ ஒரு பாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இருக்கும்‌.

எப்போது நம்‌ வாழ்வில்‌ இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம்‌ வரும்‌. நம்‌ வாழ்க்கையில்‌ சுறு சுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும்‌.

உங்களுடைய பாட்டி சீரியஸ்‌ ஆக இருக்கிறார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? அவர்‌ போவதற்கு தயாராகிவிட்டார்‌ என்று தானே அர்த்தம்‌. நீங்கள்‌ அப்படி ஆக கூடாது. எப்போதும்‌ சுறு சுறுப்பாகவும்‌ புத்துணர்வாகவும்‌ இருக்க வேண்டும்‌.

உங்களுக்குள்‌ விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும்‌ என்று அவசியம்‌ இல்லை. உங்கள்‌ விட்டிலேயே குடும்பத்தினருடன்‌ விளையாடி கொள்ளலாம்‌.

கிராமங்களில்‌ கூட இப்போது வெறும்‌ பணத்தை மட்டும்‌ கணக்கு போட்டு கொண்டு இருப்பதால்‌ மன அழுத்தம்‌ அதிகமாகிவிட்டது. சமூகங்களில்‌ ஜாதி, மதம்‌ என பல விதமான பாகுபாடுகள்‌ வந்துவிட்டது.

இதற்காக தான்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா. 2004-ம்‌ ஆண்டு இதை முதல்‌ முறையாக தொடங்கினோம்‌. இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கி செப்‌.23-ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. இகில்‌ 60,000-க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்‌ ஈடுபடுகிறார்கள்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள்‌ கிடையாது. வீட்டில்‌ சமையல்‌ செய்யும்‌ பாட்டியும்‌ அவருடைய பேரன்‌ பேத்திகளும்‌ ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில்‌ விளையாடுகிறார்கள்‌.

இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில்‌ வேறு எங்கும்‌ இல்லை என கூறலாம்‌. அந்தளவிற்கு மிகப்‌ பெரிய அளவில்‌ மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில்‌ அனைவரும்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

இப்போது நம்‌ பாரத தேசம்‌ பொருளாதாரத்தில்‌ முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில்‌ நம்‌ வாழ்வில்‌ விளையாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இல்லாமல்‌ போய்விட்டால்‌ பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...