சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் - ஈஷா கிராமோத்சவம் குறித்து வீடியோ மூலம்‌ சத்குரு அறிவுரை!

நம்‌ வாழ்க்கையில்‌ சுறுசுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும் என கிராமாத்சவம் விளையாட்டு வீரர்களுக்கு சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: சுறு சுறுப்பாகவும்‌, தெம்பாகவும்‌ இருக்க விளையாட்டு அவசியம் என ஈஷா கிராமோத்சவம் குறித்த வீடியோவில்‌ சத்குரு அறிவுறுத்தியுள்ளார்.



இந்தியாவின்‌ மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15வது ஈஷா கிராமோத்சவம்‌ இன்று தொடங்குகிறது.



இது தொடர்பாக சத்குரு அவர்கள்‌ வெளியிட்டுள்ள விடியோவில்‌, நம்‌ பாரத கலாச்சாரத்தில்‌ வாழ்க்கையையே ஒரு விழாவை போல்‌ கொண்டாட்டமாக வைத்து இருந்தோம்‌.

நம்‌ தேசத்தில்‌ 365 நாட்களும்‌ ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும்‌. விழா என்றால்‌ வேலை செய்ய கூடாது. விடுமுறை எடுக்க வேண்டும்‌, அதிகமாக சாப்பிட வேண்டும்‌ என்பது அல்ல. எப்போது நீங்கள்‌ எல்லா செயல்களையும்‌ கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்‌.

நம்‌ கிராமங்களில்‌ உழவு செய்யும்‌ போது, நெசவு நெய்யும்‌ போது, சமையல்‌ செய்யும்‌ போது, குழந்தையுடன்‌ விளையாடும்‌ போது என எந்த செயல்‌ செய்தாலும்‌ அதில்‌ ஒரு பாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இருக்கும்‌.

எப்போது நம்‌ வாழ்வில்‌ இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம்‌ வரும்‌. நம்‌ வாழ்க்கையில்‌ சுறு சுறுப்பையும்‌ தெம்பையும்‌ கொண்டு வர வேண்டுமென்றால்‌ விளையாட்டு தன்மையுடன்‌ இருக்க வேண்டும்‌. ரொம்ப சீரியஸ்‌ ஆகிவிட்டால்‌ வாழ்க்கை முடிந்துவிடும்‌.

உங்களுடைய பாட்டி சீரியஸ்‌ ஆக இருக்கிறார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? அவர்‌ போவதற்கு தயாராகிவிட்டார்‌ என்று தானே அர்த்தம்‌. நீங்கள்‌ அப்படி ஆக கூடாது. எப்போதும்‌ சுறு சுறுப்பாகவும்‌ புத்துணர்வாகவும்‌ இருக்க வேண்டும்‌.

உங்களுக்குள்‌ விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும்‌ என்று அவசியம்‌ இல்லை. உங்கள்‌ விட்டிலேயே குடும்பத்தினருடன்‌ விளையாடி கொள்ளலாம்‌.

கிராமங்களில்‌ கூட இப்போது வெறும்‌ பணத்தை மட்டும்‌ கணக்கு போட்டு கொண்டு இருப்பதால்‌ மன அழுத்தம்‌ அதிகமாகிவிட்டது. சமூகங்களில்‌ ஜாதி, மதம்‌ என பல விதமான பாகுபாடுகள்‌ வந்துவிட்டது.

இதற்காக தான்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா. 2004-ம்‌ ஆண்டு இதை முதல்‌ முறையாக தொடங்கினோம்‌. இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ தொடங்கி செப்‌.23-ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. இகில்‌ 60,000-க்கும்‌ மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்‌ ஈடுபடுகிறார்கள்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள்‌ கிடையாது. வீட்டில்‌ சமையல்‌ செய்யும்‌ பாட்டியும்‌ அவருடைய பேரன்‌ பேத்திகளும்‌ ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில்‌ விளையாடுகிறார்கள்‌.

இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில்‌ வேறு எங்கும்‌ இல்லை என கூறலாம்‌. அந்தளவிற்கு மிகப்‌ பெரிய அளவில்‌ மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில்‌ அனைவரும்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.

இப்போது நம்‌ பாரத தேசம்‌ பொருளாதாரத்தில்‌ முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில்‌ நம்‌ வாழ்வில்‌ விளையாட்டும்‌ கொண்டாட்டமும்‌ இல்லாமல்‌ போய்விட்டால்‌ பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்‌.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...