தாராபுரம் அருகே குப்பையில் கிடந்த காலாவதி மருந்துகள் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள், சாலையோரம் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



குப்பையில் கிடந்த மாத்திரைகளில், இது தமிழ்நாடு அரசு வழங்குவது, விற்பனைக்கு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.



மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிய மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களை மக்களுக்கு தராமல் வைத்திருந்து, காலாவதியான பின் குப்பையில் கொட்டப்பட்டதா, தேவைக்கு போக மீதம் இருந்த மருந்து பொருட்கள் என்றால் உரிய இடத்தில் ஒப்படைக்காதது என் எனவும், இதை செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களை சென்றடைய வேண்டிய மருந்து பொருட்கள், குப்பையில் கிடப்பதற்கு யார் பொறுப்பு என்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வர்லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...