நில உரிமை வழங்க வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்!

நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உடுமலை வனத்துறையை கண்டித்து ஊர்வலத்தில், ஈடுபட்டனர்.



இதில், 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி நில உரிமை வழங்க வேண்டும். நிலப்பகுதியில் இருந்து செல்லும் பாதைகளை கான்கிரீட் பாதைகளாக மாற்றம் செய்ய வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் திடீரென வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது உடுமலை வனத்துறையை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

மேலும் வனப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாலை அமைக்க அனுமதி அளித்தும், உடுமலை வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



மலைவாழ் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உடுமலை வனத்துறை அலுவலகத்தை முன்னிட்டு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...