காதர்பேட்டை பனியன் சந்தை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மேயர் நேரில் ஆறுதல்!

காதர்பேட்டை பனியன் சந்தையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த தீவிபத்து குறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களை மாநகராட்சி மேயர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காதர் பேட்டை பனியன் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது. 



சுமார் ஒரு கோடி ருபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் தீ விபத்து நடந்த இடத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 



அதனை தொடர்ந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எந்தெந்த உதவிகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்து தருவதாக வணிகர்களுக்கு உறுதி அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...