காதர்பேட்டை பனியன் சந்தை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மேயர் நேரில் ஆறுதல்!

காதர்பேட்டை பனியன் சந்தையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த தீவிபத்து குறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களை மாநகராட்சி மேயர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காதர் பேட்டை பனியன் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது. 



சுமார் ஒரு கோடி ருபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் தீ விபத்து நடந்த இடத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 



அதனை தொடர்ந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எந்தெந்த உதவிகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்து தருவதாக வணிகர்களுக்கு உறுதி அளித்தார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...