கோவையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி ரூ.7.38லட்சம் கொள்ளை - இருவர் கைது!

கோவை பூலுவபட்டி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38லட்சம் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை கைது செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பூலுவப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பூலுவபட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வரவு - செலவு கணக்குகளை பார்த்த பின் வீடு திரும்பி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் விற்பனையான 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், டாஸ்மாக் பதிவேடு, ஆகியவற்றை கடையில் வைக்காமல் கைப்பை ஒன்றில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று உள்ளார்.

அவருடன் மாதம்பட்டி டாஸ்மாக் கடையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது சிறுவாணி - வடிவேலம்பாளையம் சாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி பணம் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணி ராஜ், மிலன் ஆகிய இருவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 வாள்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாமல், மூளையாக செயல்பட்டு உதவி செய்தவர்கள் என்றும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...