கோவையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி ரூ.7.38லட்சம் கொள்ளை - இருவர் கைது!

கோவை பூலுவபட்டி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38லட்சம் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை கைது செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பூலுவப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பூலுவபட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வரவு - செலவு கணக்குகளை பார்த்த பின் வீடு திரும்பி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் விற்பனையான 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், டாஸ்மாக் பதிவேடு, ஆகியவற்றை கடையில் வைக்காமல் கைப்பை ஒன்றில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று உள்ளார்.

அவருடன் மாதம்பட்டி டாஸ்மாக் கடையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது சிறுவாணி - வடிவேலம்பாளையம் சாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி பணம் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணி ராஜ், மிலன் ஆகிய இருவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 வாள்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாமல், மூளையாக செயல்பட்டு உதவி செய்தவர்கள் என்றும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...