கோவையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி ரூ.7.38லட்சம் கொள்ளை - இருவர் கைது!

கோவை பூலுவபட்டி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38லட்சம் பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை கைது செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பூலுவப்பட்டி அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பூலுவபட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வரவு - செலவு கணக்குகளை பார்த்த பின் வீடு திரும்பி உள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் விற்பனையான 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தையும், டாஸ்மாக் பதிவேடு, ஆகியவற்றை கடையில் வைக்காமல் கைப்பை ஒன்றில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று உள்ளார்.

அவருடன் மாதம்பட்டி டாஸ்மாக் கடையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது சிறுவாணி - வடிவேலம்பாளையம் சாலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சண்முகசுந்தரத்தை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி பணம் வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பூலுவபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணி ராஜ், மிலன் ஆகிய இருவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 வாள்கள் மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாமல், மூளையாக செயல்பட்டு உதவி செய்தவர்கள் என்றும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...