காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச்சென்ற காதலன் கத்தியால் குத்திக்கொலை - பரபரப்பு!

கோவை சுந்தராபுரம் அருகே காதலிக்கு வாழ்த்து கூறுவதற்காக சென்ற பிரசாந்த் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிலையில், பெண்ணின் உறவினர் விக்னேஷ் (29) என்பவர் கத்தியால் குத்தியதில் பிரசாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறச் சென்ற காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவரது மகன் பிரசாந்த் (21). இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். பிரசாந்த் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (19) என்ற இளம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 



ஆரம்பத்தில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அடுத்தாண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று தன்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அப்போது நான்கு பேரும் குடிபோதையில் இருந்ததால் தன்யாவின் தந்தை மகாதேவன் (40) உறவினர் விக்னேஷ் (29) பிரசாந்தை தடுத்துள்ளனர். இதனால் விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார்.



இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த பிரசாந்தை அவரது நண்பர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காதலிக்கு வாழ்த்து கூறச்சென்ற காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...