மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி - பல்லடம் பகுதி மாணவர்கள் வென்று சாதனை!

செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உதை குத்து சண்டை போட்டி நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் தங்க பதக்கமும், வெள்ளி, வெண்கல பதக்கங்களை தலா 2 பேரும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர்: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், திருப்பூரை சேர்ந்த 7 மாணவர்கள் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

கடந்த மே 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உதை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 750 குத்துச்சண்டை வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 



இதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த திருப்பூர் மாவட்ட பாக்சிங் அசோசியேஷனில் பயிற்சி பெற்ற அகர்ஷன், விக்னேஷ், மோனீஷ், விஜய் ஹரிஹரன், தீபக், ருத்ரேஷ், பாலசூர்யா, மனோஜ், சுமந்த், கவின், அஸ்வின் ஆகிய 11 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.

வயது மற்றும் எடை அடிப்படையில் நடைபெற்ற இந்த உதை குத்து சண்டை போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் தங்க பதக்கங்களையும், 2 பேர் வெள்ளி பதக்கமும் மற்றும் 2 பேர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இது போன்ற இளம் வீரர்களுக்கு மாதாமாதம் ஊக்கத்தொகை அளித்து அரசு ஊக்குவித்தால் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனை புரிய ஊக்கமளிக்கும் வகையில் என குத்துச்சண்டை பயிற்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...