டெல்லியில் போராடும் வீராங்கனைகளை தாக்கிய போலீசார் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய டெல்லி காவல்துறையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: டெல்லியில் போராடும் விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய போலீசாரை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராக்கனைகளை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர்.



இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு மற்றும் டெல்லி காவல் துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது மாதர் சங்கத்தினர் பேசியதாவது, 6 மாதங்களுக்கு முன் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் நியாயத்திற்காக போராடும் வீராங்கனைகளை ஒடுக்குகின்றனர்.

விளையாட்டு துறையில் இம்மாதிரியான சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பையே கேள்வி குறியாக்கியுள்ளது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...