டெல்லியில் போராடும் வீராங்கனைகளை தாக்கிய போலீசார் - கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய டெல்லி காவல்துறையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: டெல்லியில் போராடும் விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய போலீசாரை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராக்கனைகளை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்தனர்.



இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு மற்றும் டெல்லி காவல் துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது மாதர் சங்கத்தினர் பேசியதாவது, 6 மாதங்களுக்கு முன் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் நியாயத்திற்காக போராடும் வீராங்கனைகளை ஒடுக்குகின்றனர்.

விளையாட்டு துறையில் இம்மாதிரியான சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பையே கேள்வி குறியாக்கியுள்ளது. இதனை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...