கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிக்காரம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.



கோவை: கோவையில் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர், கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். 

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இந்நிலையில், பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் வந்தனர். இதனையடுத்து, பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர். 

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும், கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...