கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிக்காரம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.



கோவை: கோவையில் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர், கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். 

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மூளை சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இந்நிலையில், பிரபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் வந்தனர். இதனையடுத்து, பிரபுவின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர். 

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, தானம் செய்தவரின் உடல் உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனை உள்நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும், கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவரின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை முதல்வர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...