கோவை அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு - எம்.எல்.ஏ அருண்குமார் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக நகர கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதி, அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.



கோவை: தமிழகத்தில் நிலவிவரும் கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் தணிக்கும் விதமாக, அதிமுக சார்பாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகர் கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

நீர் மோர் பந்தலை அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்,



பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவர் மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பி.ஏ, வேலுசாமி, வி.லட்சுமணசாமி, வி.சிவகுமார், முத்துசாமி, சம்பத்குமார், பி.எம்.நாகராஜ், சண்முகம், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...