கோவை அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு - எம்.எல்.ஏ அருண்குமார் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக நகர கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதி, அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.



கோவை: தமிழகத்தில் நிலவிவரும் கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் தணிக்கும் விதமாக, அதிமுக சார்பாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகர் கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

நீர் மோர் பந்தலை அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்,



பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவர் மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பி.ஏ, வேலுசாமி, வி.லட்சுமணசாமி, வி.சிவகுமார், முத்துசாமி, சம்பத்குமார், பி.எம்.நாகராஜ், சண்முகம், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...