நம்ம ஊரு சூப்பரு - கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்!

நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், NCC மற்றும் NSS மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பஷீர் அகமது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், கமலகண்ணன், மாவட்ட மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இதர களப்பணியாளர்களுக்கு பிரச்சாரம் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு வாரியாக குப்பை கொட்டும் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டும். தூய்மை காவலர்கள், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள், NCC மற்றும் NSS மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வீடுகள், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை தளங்களை சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டும். காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஊட்டச்சத்து பூங்கா அமைக்க வேண்டும்.

மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை திறம்பட அப்புறப்படுத்த சுகாதாரமான குப்பை கிடங்குகளை பயன்படுத்த வேண்டும். போதிய இடவசதி இல்லாத அல்லது அதிக அளவில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் உள்ள ஊராட்சிகளில், ஒன்றிய அளவில் கூடுதல் இடங்கள் கண்டறியப்பட வேண்டும்.

ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டபிற பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இந்த பிரச்சாரத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...