தாராபுரத்தில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவன் - 11 வயது சிறுமி பலியான சோகம்!

தாராபுரம் பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் நடந்து சென்ற தீபிகா என்ற 11 வயது சிறுமியின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அந்த காரை ஓட்டியது 15 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே 15 வயது சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நடந்து சென்ற 11 வயது சிறுமி பலியானார்.

தேனி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன்(48) - கோமதி(40) தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் திருப்பூர் மாவட்டம் கோவில்வழி அருகேயுள்ள கந்தசாமி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் அருகிலுள்ள தாராபுரம் முக்கிய சாலையில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று மாலை வீட்டில் இருந்து உணவகத்திற்கு செல்ல ஆதிநாரயணனின் 3 வது மகள் தீபிகா (11) நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி சிறுமியின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.



இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்.



காரை ஓட்டிச் சென்ற சிறுவன் அங்கிருந்து தப்பியதாக கூறப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லூர் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரின் பதிவு எண் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காரின் உரிமையாளார் ஈஸ்வரன் என்பதும், அவரது 15 வயது மகன் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...