தாராபுரத்தில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுவன் - 11 வயது சிறுமி பலியான சோகம்!

தாராபுரம் பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் நடந்து சென்ற தீபிகா என்ற 11 வயது சிறுமியின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அந்த காரை ஓட்டியது 15 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே 15 வயது சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நடந்து சென்ற 11 வயது சிறுமி பலியானார்.

தேனி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன்(48) - கோமதி(40) தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் திருப்பூர் மாவட்டம் கோவில்வழி அருகேயுள்ள கந்தசாமி தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் அருகிலுள்ள தாராபுரம் முக்கிய சாலையில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று மாலை வீட்டில் இருந்து உணவகத்திற்கு செல்ல ஆதிநாரயணனின் 3 வது மகள் தீபிகா (11) நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி சிறுமியின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.



இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்.



காரை ஓட்டிச் சென்ற சிறுவன் அங்கிருந்து தப்பியதாக கூறப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லூர் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரின் பதிவு எண் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காரின் உரிமையாளார் ஈஸ்வரன் என்பதும், அவரது 15 வயது மகன் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...