வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.


Coimbatore: வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதி, ஜெயிலை தோட்டங்கள், வால்பாறை நகர்ப்பகுதி, கோட்டூர், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, காளியாபுரம், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், வால்பாறை படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா மறுசீரமைப்பு செய்து விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பழைய மலைக்கள்ளன் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தபோது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரோப்வே கார் கேபிள் திட்டம் புதிதாக அமைக்கப்படும் என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பக எல்லைகள் மறுஅளவீடு செய்து, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.

இயற்கை சூழலை பாதிக்காத வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வனத்துறை வசூலிக்கும் பல்முனை நுழைவு கட்டணம் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வால்பாறை பகுதியில் மாற்றுத்தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோட்டூர் பகுதியில் தென்னை சார்ந்த மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும். வால்பாறை மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் வசதியுடன் கூடிய நவீன அடுக்குமாடி கட்டமைப்புகள் உருவாக்கி நகர்ப்புற மேம்பாடு செய்யப்படும் என்றும் லட்சுமண சிங் தெரிவித்தார்.

முன்னதாக வால்பாறையில் அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் வால்பாறை சுற்றுலா வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்புமுடக்கியது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...