கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில், கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியும் நடத்தினர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “கழக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதை உங்கள் வரவேற்பின் மூலம் உணர முடிகிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



உங்கள் ஆதரவுடன் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அங்கே உங்கள் குரலாக ஒலிப்பேன். தொகுதியின் தேவைகளை வலியுறுத்தி நிறைவேற்றப் பாடுபடுவேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவேன்.

இல்லத்தரசி திட்டம், மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சொன்னதைச் செய்வது திமுக அரசின் பண்பாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடர உறுதிசெய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், செட்டிபாளையம் பகுதிகளில் பிரச்சார ஏற்பாடுகளை செய்த கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், உடன்பிறப்புகள் மற்றும் வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...