அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இன்று அவிநாசியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக தொடங்கிய ரோடு ஷோ, லிங்கேஸ்வரர் கோவில் தேர் நிலை வரை நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மோகன் யாதவ் கலந்து கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “அவிநாசி புனித பூமியில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நாடு முழுவதும் நிலவும் எழுச்சியைப் போல இங்கும் எல்.முருகனுக்கு வாக்களியுங்கள். சாதாரண மக்கள் கூட பிரதமராகவும் அமைச்சராகவும் வரலாம். ஆனால் திமுகவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வர முடியும்,” என்றார்.



மேலும், “நமது பாரம்பரியம், கலாச்சாரம் கோவில்களில் உள்ளது. ஆனால் திமுக கோவில்களுக்கும் சனாதனத்திற்கும் எதிராக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எல்.முருகன், “இது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம். ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் 2-ஆம் கட்ட அத்திக்கடவு திட்டம் நிறைவேறும். அவிநாசி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்,” என்றார்.



மேலும், “ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் பெற்றுத் தரப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்,” என வாக்கு சேகரித்தார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...