கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனல் நிறுவனருமான செந்தில்வேல் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியின் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



அதற்கு முன்பாக, பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனலின் நிறுவனருமான செந்தில்வேல், திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்காக இந்த ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் ஆரோக்கியத்தை பாதுகாக்க கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை வழங்கி பெண்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.



மேலும், “எதிர்க்கட்சிகளிடம் மக்களுக்காக செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் பாஜகவே எடுக்கிறது. தமிழ்நாட்டில் சாதி, மத அரசியலை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,” என குற்றம்சாட்டினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...