கோவையில் கேரள லாட்டரி சீட்டு விற்பனை - 2 பேர் கைது!

கோவை தடாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபப்ட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: தடாகம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நாயனார் மற்றும் காவலர்கள் சுரேந்திரன், முனி, ஜனா, கார்த்தி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளா லாட்டரிகளை விற்பனை செய்துகொண்டிருந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த மதன் என்பவரையும், பன்னிமடை பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...