கோவையில் கேரள லாட்டரி சீட்டு விற்பனை - 2 பேர் கைது!

கோவை தடாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபப்ட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: தடாகம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நாயனார் மற்றும் காவலர்கள் சுரேந்திரன், முனி, ஜனா, கார்த்தி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளா லாட்டரிகளை விற்பனை செய்துகொண்டிருந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த மதன் என்பவரையும், பன்னிமடை பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...