கோவையில் கேரள லாட்டரி சீட்டு விற்பனை - 2 பேர் கைது!

கோவை தடாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபப்ட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: தடாகம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நாயனார் மற்றும் காவலர்கள் சுரேந்திரன், முனி, ஜனா, கார்த்தி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளா லாட்டரிகளை விற்பனை செய்துகொண்டிருந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த மதன் என்பவரையும், பன்னிமடை பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...