கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து உண்ணாவிரதம் - பாஜக மாநில விவசாய அணி அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் நடைபெறும் கனிவளக் கொள்ளையைக் கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி பாஜக விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

அந்தமனுவில், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் விளை நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக சுட்டுக் கொல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

யானை, மயில், மான் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வனத்தை வளப்படுத்தும் முயற்சியில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.நாகராஜ் பேசியதாவது:

கிணத்துக்கடவு பகுதியில் கனிமவளக் கொள்ளை அதிகமாக உள்ளது. இதனைக் கண்டித்து சுமார் பத்தாயிரம் பேர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இதனை பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக பல்வேறு கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதாகவும், அதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பன்றிகளை துப்பாக்கிகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதற்கு அனுமதி கேட்டு முயற்சி செய்து வருகிறோம். அன்னூர், தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஐந்து லட்சம் வாழை மரங்கள் சூறைகாற்று கனமழை காரணமாக சாய்ந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம் ஏக்கர் கணக்கில் கணக்கிட்டு குறைந்த அளவு நிவாரணம் தராமல் ஒவ்வொரு மரத்திற்கும் கணக்கெடுத்து நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பிடுதலில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. தோட்டக்கலை துறை மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தேங்காய்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தரப்பட வேண்டும். சிறுவாணி உட்பட சில அணைகள் தூர்வாரப் படாமல் இருக்கிறது. அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உதவி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. விவசாயம் செய்வதற்கு அரசு உதவி புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...