வால்பாறையில் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளான வடமாநில தொழிலாளி- வனத்துறை சார்பில் நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வடமாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்தை வனத்துறை சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்பவரை சிறுத்தை தாக்கியது.

அதில் கை கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணை, வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன்,12 வார்டு உறுப்பினர் அன்பரசன் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.



இதனிடையே, வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், சிறுத்தை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வட மாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரியை நேரில் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2000-யை வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...