வால்பாறையில் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளான வடமாநில தொழிலாளி- வனத்துறை சார்பில் நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வடமாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்தை வனத்துறை சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்பவரை சிறுத்தை தாக்கியது.

அதில் கை கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணை, வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன்,12 வார்டு உறுப்பினர் அன்பரசன் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.



இதனிடையே, வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், சிறுத்தை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வட மாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரியை நேரில் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2000-யை வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...