வால்பாறையில் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளான வடமாநில தொழிலாளி- வனத்துறை சார்பில் நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வடமாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்தை வனத்துறை சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்பவரை சிறுத்தை தாக்கியது.

அதில் கை கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணை, வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன்,12 வார்டு உறுப்பினர் அன்பரசன் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.



இதனிடையே, வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், சிறுத்தை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வட மாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரியை நேரில் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2000-யை வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...