கோவையில் 'லியோ' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள் - நடிகை திரிஷா பதில்

கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பினர். லியோ படத்தின் ஷூட்டிங்கில் இருந்துதான் வருவதாகக் கூறிய திரிஷா, மற்ற விஷயங்களை லியோ பட நிகழ்ச்சியின்போது பேசுவோம் என்று கூறினார்.


கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் மாலில் நடைபெற்றபொன்னியின் செல்வன் இரண்டாம் பாக விளம்பர நிகழ்ச்சியில் நடிகை திரிஷா பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.



அப்போது, திரிஷாவிடம் விஜய் நடித்து வரும் LEOபடத்தின் அப்டேட் குறித்து ரசிகர் கேட்டு, LEO, LEO என முழக்கமிட்டனர். ஆனால், திரிஷா அது குறித்து பதிலளிக்காமல்,நான் தற்போது LEO பட சூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்லா இருக்காங்க.மற்றவற்றை LEO நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் என்றார்.



ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதன்படி, திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார்.



பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதைபோல் வரிசைப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டதற்கு,PS2 புரோமோசன் என்பதால்,என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT(வந்தியதேவன்) தான் என திரிஷா பதிலளித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ்.. இரண்டாவது உங்களுடைய சாப்பாடு.. மூன்றாவது கோவையில் எப்போதுமே இருக்கும் அமைதி...என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...