ஆலாந்துறை வனச்சரகத்தில் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆலாந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளை கொண்டு தீயை அணைத்து வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஆலாந்துறை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை நாதேகவுன்னடன் புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரவு, பகலாக தீ அணைத்து வரும் நிலையில், மலைப்பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிகளவு வன ஊழியர்கள், தன்னார்வலர்களும் சேர்ந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டரை கொண்டு தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...