ஆலாந்துறை வனச்சரகத்தில் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆலாந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளை கொண்டு தீயை அணைத்து வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஆலாந்துறை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை நாதேகவுன்னடன் புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரவு, பகலாக தீ அணைத்து வரும் நிலையில், மலைப்பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிகளவு வன ஊழியர்கள், தன்னார்வலர்களும் சேர்ந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டரை கொண்டு தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...