ஆலாந்துறை வனச்சரகத்தில் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆலாந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளை கொண்டு தீயை அணைத்து வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஆலாந்துறை மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை நாதேகவுன்னடன் புதூர் பகுதியில் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சிமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக எரிந்து வருகிறது. வனத்துறையினர் செடிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரவு, பகலாக தீ அணைத்து வரும் நிலையில், மலைப்பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிகளவு வன ஊழியர்கள், தன்னார்வலர்களும் சேர்ந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள ஹெலிகாப்டரை கொண்டு தீயை அணைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...