கோவையில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபர் கைது!

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தனலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தட்டிக்கேட்ட சகோதரியையும் தாக்கியுள்ளார். இவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தம்பதி நடராஜ்-தனலட்சுமி (60). இவர்களது இளைய மகன் மணிகண்டன் (34). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினந்தோறும் குடித்துவிட்டு, தாய் தனலட்சுமியை மிரட்டி பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தாய் தனலட்சுமியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அவரது அக்காவையும் குடிபோதையில் தாக்கியுள்ளார். இதை அடுத்து தனலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மணிகண்டன் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...