கோவையில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபர் கைது!

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதைக்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் தனலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தட்டிக்கேட்ட சகோதரியையும் தாக்கியுள்ளார். இவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் குடிபோதையில் தாய், சகோதரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தம்பதி நடராஜ்-தனலட்சுமி (60). இவர்களது இளைய மகன் மணிகண்டன் (34). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினந்தோறும் குடித்துவிட்டு, தாய் தனலட்சுமியை மிரட்டி பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தாய் தனலட்சுமியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அவரது அக்காவையும் குடிபோதையில் தாக்கியுள்ளார். இதை அடுத்து தனலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மணிகண்டன் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...