கோவை அருகே மதுபோதையில் சாலையிலேயே படுத்து உறங்கிய பெண் - போக்குவரத்து பாதிப்பு!

பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கிய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவரை எழுப்பி அனுப்பி வைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் மதுபோதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி - கோவை சாலை பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இந்நிலையில், போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி அப்பகுதியில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.



ஆனால் மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அங்கிருந்த போலீசாரை கேலி, கிண்டல் செய்ததுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அந்த பெண் ஈடுபட்டார்.



போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்த வாகனங்களை சைகை முறையில் கை அசைத்து சிறிது நேரம் போக்குவரத்து பணியை செய்தார். பின்பு நீண்ட நேரம் போராடிய போலீசார் அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...