கோவை அருகே மதுபோதையில் சாலையிலேயே படுத்து உறங்கிய பெண் - போக்குவரத்து பாதிப்பு!

பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கிய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவரை எழுப்பி அனுப்பி வைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் பெண் ஒருவர் மதுபோதையில் நடுரோட்டிலேயே படுத்து உறங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி - கோவை சாலை பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இந்நிலையில், போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி அப்பகுதியில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.



ஆனால் மது போதை தலைக்கு ஏறிய நிலையில் அங்கிருந்த போலீசாரை கேலி, கிண்டல் செய்ததுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அந்த பெண் ஈடுபட்டார்.



போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருந்த வாகனங்களை சைகை முறையில் கை அசைத்து சிறிது நேரம் போக்குவரத்து பணியை செய்தார். பின்பு நீண்ட நேரம் போராடிய போலீசார் அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...