புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - கோவை இளைஞருக்கு உற்சாக வரவேற்பு

புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவசூரியன் செந்தில்ராமன் எனும் இளைஞர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (வயது28).



கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில், அவர் இந்த மாதம் 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இந்த சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.



கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்ட அவர் தற்போது கோவை வந்தடைந்துள்ளார். கோவை ராஜ வீதியில் அவருக்கு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்க வலியுறுத்தியும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருவதாகவும், இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தில் இருந்து 1920 கிலோமீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டதாகவும் செந்தில்ராமன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு எனக்கு, குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன் எனக் கூறிய அவர், பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...