புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் - கோவை இளைஞருக்கு உற்சாக வரவேற்பு

புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவசூரியன் செந்தில்ராமன் எனும் இளைஞர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (வயது28).



கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில், அவர் இந்த மாதம் 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இந்த சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.



கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்ட அவர் தற்போது கோவை வந்தடைந்துள்ளார். கோவை ராஜ வீதியில் அவருக்கு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்க வலியுறுத்தியும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருவதாகவும், இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தில் இருந்து 1920 கிலோமீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டதாகவும் செந்தில்ராமன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு எனக்கு, குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன் எனக் கூறிய அவர், பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...