உடுமலை நகராட்சியில் பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனர்கள் - பரபரப்பு!

உடுமலை அடுத்த காந்திநகர் பேருந்து நிறுத்தத்தை மறைத்து, அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் பேருந்துக்காக காத்து கிடக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் அத்தகையை பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்பட்ட பேனரால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

உடுமலை நகராட்சி பகுதிகளில், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பேருந்து நிறுத்தம் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கபட்டு உள்ளன.



பிரதான சாலைகளான, பழநி சாலை, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை, தளி சாலை, திருப்பூர் சாலை, ராஜேந்திரா சாலை மற்றும் தளி சாலை சந்திப்பு, பேருந்து நிறுத்தம், அனுஷம் சாலை சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



இதற்கிடையில் உடுமலை காந்திநகர் பேருந்து நிறுத்தத்தை மறைத்து, அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் பேருந்துக்காக காத்து கிடக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஓரு சில இடங்களில் காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆகையால் அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதிமீறி, இவ்வாறு அமைக்கப்பட்டு வருகிறது. பிளக்ஸ் பேனர்களால், கவன சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இதன் காரணமாக உடுமலை நகர பகுதிகளில், விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களைஉடனே அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை வேண்டும் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....