ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அரசு பள்ளியில் வனத்துறை செயலாளர் ஆய்வு!

டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் கும்கி யானையாகிய கலிம் 60 வயதை கடந்து ஓய்வு பெரும் விழாவிற்கு சென்ற வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளியை ஆய்வு செய்து சிறப்பாக செயல்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பகுதியில் பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு டாப்சிலிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் கும்கி யானையாகிய கலிம் 60 வயதை கடந்து ஓய்வு பெரும் விழாவிற்கு வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு வருகை தந்தார்.

அப்போது வனப்பகுதியில் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். அதில் டாப்சிலிப் பகுதியில் உள்ள பழங்குடியினர் மாணவ-மாணவிகள் பயிலும் உண்டு உறைவிட பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றிருந்தார். அங்கு டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறை, மேலும் சுத்தமான, சுகாதாரமான கழிப்பிடம், அறிவியல் வகுப்பு அறை, அறிவியல் ஆய்வகம் போன்றவர்களை ஆய்வு செய்து 90 மாணவர்கள் படிக்கும் பள்ளியை ஆய்வு செய்தார்.



இதை வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு, தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளி என்று ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...