கோவையில் கடன் வாங்கி தருவதாக மோசடி - 4 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்!

கோவை பீளமேடு பகுதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த குணசெல்வி என்பவரிடம் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்மநபரை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி பகுதியை சேர்ந்தவர் குணசெல்வி (வயது 50). இவர் அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் நைசாக பேசினார்.

முன்னணி வங்கியில் கடன்பெற்று தரும் வேலை செய்துவருவதாகவும், விருப்பப்பட்டால் உங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

கடன் தேவை என்று குணசெல்வி தெரிவித்த நிலையில், அப்பெண்ணை ஒரு வங்கிக்கு அழைத்து சென்றிருக்கின்றார். வங்கிக்கு அருகிலே சென்றவுடன், நீங்கள் நகை அணிந்து வந்து கடன் கேட்டால், உங்களுக்கு தனிநபர் கடன் கிடைக்காது என்று கூறிய அந்த மர்ம நபர், குணசெல்வி அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து கொடுப்பதுபோல் அவரிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் குணசெல்வி வங்கியில் காத்திருக்குமாறு கூறி, ஆவணங்கள் சிலவற்றை வாங்கி வருவதாக அப்பெண்ணிடம் தெரிவித்து சென்றார். அந்த நபர் மீண்டும் வரவில்லை. சற்று நேரம் கழித்து அவர் மடித்துக் கொடுத்த காகிதத்தைப் பிரித்து பார்க்கும் பொழுது அதில் தங்க நகை இல்லாமல், கல் இருப்பதை கண்டு குணசெல்வி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையுடன் தலைமறைவான நபரைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...