கோவையில் கடன் வாங்கி தருவதாக மோசடி - 4 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்!

கோவை பீளமேடு பகுதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த குணசெல்வி என்பவரிடம் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்மநபரை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி பகுதியை சேர்ந்தவர் குணசெல்வி (வயது 50). இவர் அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் நைசாக பேசினார்.

முன்னணி வங்கியில் கடன்பெற்று தரும் வேலை செய்துவருவதாகவும், விருப்பப்பட்டால் உங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

கடன் தேவை என்று குணசெல்வி தெரிவித்த நிலையில், அப்பெண்ணை ஒரு வங்கிக்கு அழைத்து சென்றிருக்கின்றார். வங்கிக்கு அருகிலே சென்றவுடன், நீங்கள் நகை அணிந்து வந்து கடன் கேட்டால், உங்களுக்கு தனிநபர் கடன் கிடைக்காது என்று கூறிய அந்த மர்ம நபர், குணசெல்வி அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து கொடுப்பதுபோல் அவரிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் குணசெல்வி வங்கியில் காத்திருக்குமாறு கூறி, ஆவணங்கள் சிலவற்றை வாங்கி வருவதாக அப்பெண்ணிடம் தெரிவித்து சென்றார். அந்த நபர் மீண்டும் வரவில்லை. சற்று நேரம் கழித்து அவர் மடித்துக் கொடுத்த காகிதத்தைப் பிரித்து பார்க்கும் பொழுது அதில் தங்க நகை இல்லாமல், கல் இருப்பதை கண்டு குணசெல்வி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையுடன் தலைமறைவான நபரைத் தேடிவருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...