சுந்தராபுரம் அருகே நடுரோட்டில் தோசை மாஸ்டரிடம் கஞ்சா கேட்டு மர்ம நபர்கள் தகராறு - பரபரப்பு!

சுந்தராபுரம் அடுத்த செங்கப்பகோனார் வீதியில் நடந்து சென்ற தோசை மாஸ்டர் முத்துப்பாண்டியிடம் மர்ம நபர்கள் மூவர், கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டு, செல்போனை பறித்து சென்ற நிலையில் புகாரின் பேரில் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே நடுரோட்டில் தோசை மாஸ்டரிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(23). இவர் சுந்தராபுரம் அருகே தங்கி ஓட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பணிக்கு செல்வதற்காக சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது அவரை வழிமறித்த மூன்று நபர்கள், இவரிடம் கஞ்சா கேட்டு கலாட்டாவில் ஈடுபட்டு அடாவடி செய்திருக்கின்றனர். தோசை மாஸ்டரான முத்துப்பாண்டி, தன்னிடம் கஞ்சா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூவரும் முத்துபாண்டியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து முத்துப்பாண்டி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற மூன்று நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரவணன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சாலையில் நடந்து சென்றவரிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...