சுந்தராபுரம் அருகே நடுரோட்டில் தோசை மாஸ்டரிடம் கஞ்சா கேட்டு மர்ம நபர்கள் தகராறு - பரபரப்பு!

சுந்தராபுரம் அடுத்த செங்கப்பகோனார் வீதியில் நடந்து சென்ற தோசை மாஸ்டர் முத்துப்பாண்டியிடம் மர்ம நபர்கள் மூவர், கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்டு, செல்போனை பறித்து சென்ற நிலையில் புகாரின் பேரில் போலீசார் சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே நடுரோட்டில் தோசை மாஸ்டரிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(23). இவர் சுந்தராபுரம் அருகே தங்கி ஓட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பணிக்கு செல்வதற்காக சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது அவரை வழிமறித்த மூன்று நபர்கள், இவரிடம் கஞ்சா கேட்டு கலாட்டாவில் ஈடுபட்டு அடாவடி செய்திருக்கின்றனர். தோசை மாஸ்டரான முத்துப்பாண்டி, தன்னிடம் கஞ்சா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூவரும் முத்துபாண்டியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து முத்துப்பாண்டி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற மூன்று நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரவணன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சாலையில் நடந்து சென்றவரிடம் கஞ்சா கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...