கோவை அருகே சாலையை சீரமைக்கக்கோரி திடீர் மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிஎன் பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்துச் சென்றனர்.



கோவை: கோவை துடியலூரில் இருந்து பன்னிமடை வழியாக வரப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. 

அப்பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக, மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியும் ஆகி, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சங்கர் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகள் உள்ளதால், பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரிடமும் புகார் மனு கொடுத்திருந்தனர்.



அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.



இதனால், அந்த வழியாக சென்ற அனைத்து பள்ளி கல்லூரி வாகனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார், மண்டல அலுவலர் ஜோதி மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அவர்கள் உடனடியாக சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்என்று தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...