கோவை தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறு - இருவர் கைது

கோவை சித்திரைச் சாவடி அணை அருகே தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளர்களிடம் ஆபாசமாக செய்கை காட்டி தகராறில் ஈடுபட்ட ஏகனூர் தோட்டத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ், முத்துக்குமார் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் ஏகனூர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (25). இவரது நண்பர் முத்துக்குமார் (31) இருவரும் வியாழக்கிழமை கோவை சித்திரைச்சாவடி அணை அருகே குடிபோதையில் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அப்பகுதி எதிரே இருந்த தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். குடி போதையில் இருந்த சந்திரபிரகாஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்களது உடைகளை கழட்டி விட்டு வட மாநில பெண் தொழிலாளர்களை நோக்கி ஆபாசமாக செய்கையை காட்டியவாறு, அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த தருண் பாலாஜி என்ற இளைஞர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்திரபிரகாஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...