கோவை தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறு - இருவர் கைது

கோவை சித்திரைச் சாவடி அணை அருகே தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளர்களிடம் ஆபாசமாக செய்கை காட்டி தகராறில் ஈடுபட்ட ஏகனூர் தோட்டத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ், முத்துக்குமார் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் ஏகனூர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (25). இவரது நண்பர் முத்துக்குமார் (31) இருவரும் வியாழக்கிழமை கோவை சித்திரைச்சாவடி அணை அருகே குடிபோதையில் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அப்பகுதி எதிரே இருந்த தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். குடி போதையில் இருந்த சந்திரபிரகாஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்களது உடைகளை கழட்டி விட்டு வட மாநில பெண் தொழிலாளர்களை நோக்கி ஆபாசமாக செய்கையை காட்டியவாறு, அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த தருண் பாலாஜி என்ற இளைஞர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்திரபிரகாஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...