கோவை தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறு - இருவர் கைது

கோவை சித்திரைச் சாவடி அணை அருகே தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளர்களிடம் ஆபாசமாக செய்கை காட்டி தகராறில் ஈடுபட்ட ஏகனூர் தோட்டத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ், முத்துக்குமார் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் ஏகனூர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (25). இவரது நண்பர் முத்துக்குமார் (31) இருவரும் வியாழக்கிழமை கோவை சித்திரைச்சாவடி அணை அருகே குடிபோதையில் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அப்பகுதி எதிரே இருந்த தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். குடி போதையில் இருந்த சந்திரபிரகாஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்களது உடைகளை கழட்டி விட்டு வட மாநில பெண் தொழிலாளர்களை நோக்கி ஆபாசமாக செய்கையை காட்டியவாறு, அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த தருண் பாலாஜி என்ற இளைஞர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்திரபிரகாஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...