கோவை பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலை

கோவை வடவள்ளியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி, உக்கடத்திற்கு பேருந்தில் செல்லும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் நகையை திருடிச் சென்ற நபரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தகுமாரி (வயது62). இவர் டவுன்ஹால் பகுதிக்கு தனிப்பட்ட வேலையாக சென்றார்.

வேலையை முடித்துவிட்டு வடவள்ளி செல்வதற்காக டவுன்ஹாலில் இருந்து உக்கடத்திற்கு ரூட் நெம்பர் 33 பேருந்தில் அவர் ஏறி பயணித்துள்ளார்.

பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்பொழுது தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், பேருந்து நிலையம் அருகே உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...