கோவை அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் - சட்டவிரோத கும்பல் கைது!

கோவை காரமடை அருகே பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, திருச்சூரை சேர்ந்த தினேஷ், திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் தலைமை காவலர் சிவப்பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(வயது23), ஆனந்த் (வயது25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43) என்பது தெரியவந்தது.



அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில், 26 கட்டுகளில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இந்த வெடிகளை வைத்திருந்த அந்த நபர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்கின்ற, காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருளை எவ்வித உரிமையுமின்றி, சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவது போலீசாரின் விசாரணையில் வெளிவந்தது. அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து, அவரை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது அவரது வேலை நடந்துவரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடமிருந்து வாங்கியிருப்பதும் உறுதியானது.

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டதோடு, இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துரித நடவவடிக்கை எடுத்த காவல்துறையினரையும் பாராட்டினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...