கோவை அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் - சட்டவிரோத கும்பல் கைது!

கோவை காரமடை அருகே பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, திருச்சூரை சேர்ந்த தினேஷ், திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் தலைமை காவலர் சிவப்பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(வயது23), ஆனந்த் (வயது25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43) என்பது தெரியவந்தது.



அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில், 26 கட்டுகளில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இந்த வெடிகளை வைத்திருந்த அந்த நபர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்கின்ற, காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருளை எவ்வித உரிமையுமின்றி, சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவது போலீசாரின் விசாரணையில் வெளிவந்தது. அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து, அவரை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது அவரது வேலை நடந்துவரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடமிருந்து வாங்கியிருப்பதும் உறுதியானது.

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டதோடு, இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துரித நடவவடிக்கை எடுத்த காவல்துறையினரையும் பாராட்டினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...