உடுமலை அருகே தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிக்கு நேர்ந்த துயரம்

உடுமலை அருகே அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய ரூ.25ஆயிரம் செலவு செய்து, ஒட்டுமொத்த விளைச்சலையும் விவசாயி ஒருவர் ரூ.1,000-க்கு விற்பனை செய்த அவலம் அரங்கேறியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயி சரியான விளைச்சல் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக ரூ. 1000-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி தரப்பில் கூறியதாவது, 'கடந்த காலங்களில் பருவமழைக் காலத்தில் விதைத்து விட்டு வீட்டுக்கு வந்தால் அறுவடை செய்வதற்குச் சென்றால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட இடைவெளியில் உரமிடுதல் மற்றும் மருந்து தெளிக்காவிட்டால் விளைச்சல் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

அதேநேரத்தில் உரியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டும் விளைச்சல் எடுக்க முடியாத அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரை ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்ய முக்கால் கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதை ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதுதவிர உழவு, ஆள் கூலி, உரம், பூச்சி மருந்து என அரை ஏக்கரில் ரூ.25 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது.



கோடையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டோம். ஆனால் காய்கள் சிறுத்து வெள்ளை பாய்ந்துள்ளதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 7 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகக்குறைந்த அளவிலான, தரமற்ற காய்களே கிடைத்தது.



இதனால் வயலை சுத்தம் செய்யும் நோக்கில் வெறும் ரூ.1000க்கு விற்பனை செய்தோம். இந்த நிலைக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. தரமற்ற விதைகளா? வேறு எதுவும் வினோத நோய் தாக்குதலா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனி தர்பூசணி சாகுபடி செய்வதைக் கைவிடுவதா அல்லது விவசாயத்தையே கைவிடுவதா என்று எண்ணுமளவுக்கு மனது சோர்வடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...