கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் பற்றி எரிந்த வாகனங்களால் பரபரப்பு

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.



இந்நிலையில் இன்று மாலை திடீரென சுமார் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெயிலின் காரணமாக தீப்பற்றி இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின.



வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...