நீலகிரி வனத்தில் வறட்சியால் காட்டுத் தீ ஆபத்து - தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி தொடங்கி உள்ளதை அடுத்து, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.



இதனையடுத்து காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், வன பகுதிக்குள்ளும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, உதகையிலிருந்து முதுமலைக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை, மசினகுடி நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளி - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளின் இருபுறமும், மசினகுடி, சிங்கார, சீகூர், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி வனபகுதிக்குள்ளும் என சுமார் 300 கிலோ மீட்டருக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாவதை தடுக்க அமைக்கபடும் இந்த தீ தடுப்பு கோடுகளைக்கொண்டு, வன பகுதியில் பற்றி எரியும் தீ ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பரவிச்செல்லாமல் தடுக்க உதவும் என்பதால் ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...