நீலகிரி வனத்தில் வறட்சியால் காட்டுத் தீ ஆபத்து - தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி தொடங்கி உள்ளதை அடுத்து, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 கிலோ மீட்டருக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் பனிக்காலம் முடிந்து கோடை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்பநிலை அதிகரித்து வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.



இதனையடுத்து காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சாலைகளின் ஓரங்களிலும், வன பகுதிக்குள்ளும் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



குறிப்பாக, உதகையிலிருந்து முதுமலைக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை, மசினகுடி நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளி - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளின் இருபுறமும், மசினகுடி, சிங்கார, சீகூர், முதுமலை, தெப்பக்காடு, கார்குடி வனபகுதிக்குள்ளும் என சுமார் 300 கிலோ மீட்டருக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



கோடைகாலத்தில் காட்டு தீ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாவதை தடுக்க அமைக்கபடும் இந்த தீ தடுப்பு கோடுகளைக்கொண்டு, வன பகுதியில் பற்றி எரியும் தீ ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு பரவிச்செல்லாமல் தடுக்க உதவும் என்பதால் ஆண்டுதோறும் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...